தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது அந்த சமூகங்கள் சமூக ரீதியில் பின்தங்கியுள்ளனவா என்பது குறித்து ஆய்வுகள் செய்யத் தேவையில்லை என்று புதன்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசால் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலே போதும் என்று மத்திய அரசு கூறியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

‘நாகராஜ் வழக்கு’ என்று பரவலாக அறியப்பட்ட வழக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அவை வழங்கிய தீர்ப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்புகளின் பின்தங்கிய நிலை, அந்த இரு சமூகங்களையும் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகள் பொறுப்பில் உள்ள பிரதிநித்துவம் மற்றும் நிர்வாகத் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *