வெளி நாட்டு கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு 10 லட்சம் உதவி தொகை
கிரேட் உதவித்தொகை

பிரிட்டன் கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும், சிறந்த இந்திய மாணவர்களுக்கு கிரேட் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, கல்வி கட்டணம் செலுத்த 10 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்படுகிறது.

பங்குபெறும் கல்வி நிறுவனங்கள்:

ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகம்

ஆஸ்டன் பல்கலைக்கழகம்

கில்டால் ஸ்கூல் ஆப் மியூசிக் அண்ட் டிராமா

ஹார்ட்புரி பல்கலைக்கழகம்

ஜே.சி.ஏ., லண்டன் பேஷன் அகாடமி

நார்விச் கலை பல்கலைக்கழகம்

குயின்ஸ் பல்கலைக்கழகம் – பெல்பாஸ்ட்

ராபர்ட் கார்டன் பல்கலைக்கழகம்

ராயல் காலேஜ் ஆப் ஆர்ட்

ராயல் வடக்கு இசைக் கல்லூரி

ஷெபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம்

டிரினிட்டி லாபன் இசை மற்றும் நடன கன்சர்வேட்டரி

லண்டன் பல்கலைக்கழக கல்லூரி

பாத் பல்கலைக்கழகம்

பர்மிங்காம் பல்கலைக்கழகம்

பிரிஸ்டல் பல்கலைக்கழகம்

சிசெஸ்டர் பல்கலைக்கழகம்

டெர்பி பல்கலைக்கழகம்

கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம்

கிளாஸ்கோ பல்கலைக்கழகம்

கென்ட் பல்கலைக்கழகம்

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம்

ஸ்டிர்லிங் பல்கலைக்கழகம்

மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம்

செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம்

தகுதிகள்:

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். பிரிட்டனில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். இந்த உதவித்தொகை திட்டத்தில் பங்குபெறும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் சேர்க்கை பெற வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் வரையறுத்துள்ள ஆங்கில புலமையை பெற்றிருப்பதும் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழக இணையதளத்தின் உதவித்தொகை பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள, வழிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் நேரடியாக உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு: https://study-uk.britishcouncil.org/scholarships/great-scholarships/india

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *